யாழ்.பொன்னாலை - மூளாய் கடலுணவு வியாபாரிகளின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பொன்னாலை மற்றும் மூளாய் பிரதேசங்களில் கடல் உணவு விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் கடந்த (30) புதன்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் 

பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பொன்னாலை சந்தியில் உள்ள சந்தை வியாபாரிகள் மற்றும் அங்கு கடலுணவுகளைக் கொள்வனவு செய்து வெளி இடங்களில் விற்பனை செய்யும் 

வியாபாரிகள் உள்ளடங்கலாக 44 பேரிடம் இந்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு