யாழ்.தெல்லிப்பழையில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 14 வயதான சிறுமி மற்றும் 23 வயதான இளைஞன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 14 வயதான சிறுமி மற்றும் 23 வயதான இளைஞன்..

யாழ்.தெல்லிப்பழையில் கொரோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவி எனவும், மற்றயவர் 23 வயதான இளைஞனுமெ என தொியவந்திருக்கின்றது. 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இவர்கள் 14 வயதான மாணவியும், 23 வயதான இளைஞனும் என கூறப்படுகின்றது. 14 வயது மாணவி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை சுயதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு முன்னதாக 

அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதன்போது அவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய 23 வயதுடைய இளைஞன் ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டார். அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இருவரும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு