யாழ்.கொழும்புத்துறை - கணக்கர்சந்தியில் குழந்தையை புதைத்த சம்பவம்..! இளம்பெண்ணின் தாய் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறை - கணக்கர்சந்தியில் குழந்தையை புதைத்த சம்பவம்..! இளம்பெண்ணின் தாய் கைது..

யாழ்.கொழும்புத்துறை - கணக்கர் சந்தி பகுதியில் குழந்தையை பெற்று மண்ணில் புதைத்த சம்பவம் தொடர்பில் நடைபெற்ற விசாரணையில் குழந்தயை பெற்ற இளம் பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

கணக்கர் சந்தியில் 24 வயதான இளம்பெண் குழந்தையை பெற்று புதைத்த சம்பவம் தொடர்பில் நேற்று நடைபெற்ற விசாரணையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், 

மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு முன்னெடுக்கப்பட்டது. உயிருடன் பிறந்த குழந்தை மூக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தப்பட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. 

என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் தாயாரான இளம் பெண் தனக்கு குழந்தை பிறந்தமை தெரியாது என்று ஆரம்ப விசாரணையில் தெரிவித்த நிலையில் 

அவரின் தாயாரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அதனையடுத்து இளம் பெண்ணின் தாயார் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு