யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனையிலேயே மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 676 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. 

தில் உடுவில் பகுதியில் 8 பேருக்கும், சண்டிலிப்பாய் பகுதியில் 3 பேருக்கும், தெல்லிப்பளையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் புதுக்குடியிருப்பில் ஒருவருக்கும் மாதகல்- தம்பகொல பட்டினம் தனிமைப்படுத்தல்

நிலையத்தில் ஒருவருக்குமாக இன்றைய பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதியானது அதில் 12 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு