யாழ்.மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! உடுவில் 8, சண்டிலிப்பாய் 1 ..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று 240 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் உடுவில் பகுதில் 8 பேருக்கும் சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்பில் இருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என பணிப்பாளர் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு