நல்லுார் பிரதேசசபையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மணி அணியிடம்..! புதிய தவிசாளராக மயூரன்..

ஆசிரியர் - Editor I

நல்லுார் பிரதேசசபையின் புதிய தவிசாளரான தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசூதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன் மொழியப்பட்டனர். 

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமாக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

அதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் , குமாரசாமி மதுசூதனன் 08 வாக்குகளையும் , பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். 

அதன் அடிப்படையில் புதிய தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு