மக்கள் பீதியடையவேண்டாம்..! பாதுகாப்பை இறுக்கமாக கடைப்பிடிக்கிறோம், சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைவந்த சுற்றுலா பயணிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் பீதியடையவேண்டாம். 

என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, நாங்கள் தயாராக இருக்கிறோம். 

எனவேதான் அவர்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூகத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. 

என்றும் கூறியுள்ள சுகாதார அமைச்சு மக்கள் அநாவசியமாக அச்சமடைய தேவையில்லை எனவும் கேட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு