யாழ்.பருத்துறையில் வாள்வெட்டு மோதல்..! பெண் ஒருவர் உட்பட 3 பேர் வாள்வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை கரணவாய் - முதலைகுழி கிராமத்தில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சந்திரமோகன் சஜிந்தன் (வயது 29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது 55), தேவராசா ரஞ்சிதா (வயது 35) ஆகியோரே வெட்டுக் காயமடைந்திருக்கும் நிலையில், 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. என பொலிஸர் கூறியிருக்கின்றனர். 

எனினும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு