சத்தான உணவு மற்றும் பராமரிப்பு சரியில்லை..! கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் கொரோனா வைத்தியசாலை நோயாளர்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
சத்தான உணவு மற்றும் பராமரிப்பு சரியில்லை..! கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் கொரோனா வைத்தியசாலை நோயாளர்கள் குற்றச்சாட்டு..

கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்குரிய பராமரிப்பு மோசமாக உள்ளதென அங்குள்ள நோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதற்கு உடலிற்கு ஊட்டச்சத்துக்கள் தேவை எனவும் அதன் ஊடாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் பெற முடியும் எனவும் கூறப்படுவதுடன் அதற்கேற்ற உணவுகள் உட்கொள்ளுமாறும் கூறப்படுகிறது. 

ஆனால் எமக்கு அவ்வாறான உணவுகள் வழங்கப்படுவதாக இல்லை. அதேவேளையில் வைத்தியசாலையில் நோய் குணமடைந்து செல்ல உள்ளவர்களும் நோய்களோடு வைத்தியசாலையில் உள்ளவர்களும் ஒன்றாக இருக்கின்றனர்

இதனால் அங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அங்குள்ள நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை 

உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் சற்று முன்னர் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கும் தெரியப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு