தமிழ் அரசியல் கைதிகளை கொல்லாதே..! விடுதலை செய்..! யாழ்.நல்லுாரில் பாரிய போராட்டம்..

ஆசிரியர் - Editor I

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் நல்லூர் பின் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது. போராட்டத்தில் “கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே”

“விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “கொல்லாதே கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே”, “சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா?”

என்பனபோன்ற கோஷங்களை இதன்போது எழுப்பியிருந்தனர். போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 

உள்ளூராட்சிமன்றங்களில் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள்உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு