யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 393 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இது குறித்து பணிப்பாளர் மேலும் கூறியுள்ளதாவது, சங்கானை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ( மேற்படி நபர் ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரோடு 

நேரடி தொடர்பை கொண்டிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்திலில் இருந்தவர்.) மேலும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், 

கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு