முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் தொற்றுக்குள்ளானவரின் உடலில் வீரியம் கூடிய கொரோனா வைரஸ்..! பலருக்கு பரவியிருக்கலாம். மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபரிடம் பெறப்பட்ட கொவிட் -19 வைரஸ் வீரியம் கூடியது. என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் பெறப்பட்ட கொவிட் -19 வைரஸ் மிக வீரியம் கூடியதாகும். 

மேலும் வேகமாக பரவும் அபாயம் கொண்டதுமாகும். இதேபோல் தொற்றுக்குள்ளான நபர் தனிமைப்படுத்தலில் இருக்கவில்லை. என்பதுடன் சமூக மட்டத்தில் நடமாடியுள்ளதால் அங்கு பலருக்கு தொற்று பரவியிருக்கலாம். 

தொற்றாளர்கள் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். என பணிப்பாளர் எச்சரித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு