முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் தொற்றுக்குள்ளானவர் சமூக மட்டத்தில் நடமாடியவர்..! தீவிர நடவடிக்கையில் சுகாதார பிரிவு மற்றும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பகுதியை சேர்ந்தவர் மரக்கறி வியாபாரி என தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் தனிமைப்படுத்தலில் இருக்கவில்லை. எனவும் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தைகளில் இவர் நடமாடியதாகவும் சுகாதார பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியவர்கள், சந்தை வியாபாரிகள் சுகாதார பிரிவினருடன், அல்லது புதுக்குடியிருப்பு பொலிஸாருடன் தொடர்புகொண்டு தம்மை அடையாளப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும், குறிப்பாக ஆலயங்களில் ஒன்றுகூட வேண்டாம் எனவும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துளரளனர்.

மேலும் தொற்றுக்குள்ளான நபர் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ளார்.  குடும்பத்தினர் மற்றும் தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய

நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பகுதியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு