கிளிநொச்சி - கல்மடு குளத்தில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் மீட்பு..! கடற்படை சுழியோடிகளின் பல மணி நேர தேடுதலின் பின்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - கல்மடு குளத்தில் மூழ்கி காணாமல்போனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று காலை சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் 

குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி கானமல் போயுள்ள நிலையில் 

ஊரவர்களால் தேடும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.நேற்றைய தினம் காணாமல் போனவர் மீட்கப்படதா நிலையில் 

கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் கடற்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

தொடர்ச்சியாக இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் காணாமல்போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று கடற்படையினரால் காணாமல் போனவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த நபர் கிளிநொச்சி கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதான இரத்தினம் லோகிதன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

 உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மன்னெடுத்த வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு