உலர் உணவு பொதிகளை வழங்க வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.நாவாந்துறையில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
உலர் உணவு பொதிகளை வழங்க வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.நாவாந்துறையில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..

கிளிநொச்சியிலிருந்து யாழ்.நாவாந்துறைக்கு உலர் உணவு உதவி வழங்க வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாவாந்துறையில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

நாவாந்துறை ஜே.86 கிராம சேவகர் பிரிவிலேயே மேற்படி 30 குடும்பங்கள் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். குறித்த பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு உதவி வழங்க வந்த நபர் ஒருவருக்கு

நேற்று முன்தினம் புதன் கிழமை கிளிநொச்சியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார பிரிவினர் இந்த நடவடிக்கையினை எடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு

நாளை பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு