சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 16ம் ஆண்டு நினைவேந்தலை நடாத்த அனுமதி..! சில நிபந்தனைகளுடன்..

ஆசிரியர் - Editor I

வடக்கில் சுனாமி நினைவேந்தலை நடாத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்டோரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல்

நாளை நடைபெறவுள்ள நிலையில், தற்போது உள்ள கொரோனா பரவல் அச்சநிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி 

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடாத்த முடியும்.

மேலும், தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 

குறித்து சுனாமி இடரால் உயிரிழந்தோரை நினைவு கூரும் நிகழ்வுகளை அப்பகுதி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் 

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மக்களுடன் குறித்த நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு