யாழ்.கொடிகாமம்- புத்தூர் சந்தியில் குடும்பஸ்த்தர் குத்தி கொலை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.புத்தூர் சந்தி பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஐயாத்துரை மோகனதாஸ் (வயது45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீசாலை வீழசிங்கம் பாடசாலைக்கு பின்புறமாக வசிக்கும் குறித்த நபர் இன்று காலை துவிச்சக்கர வண்டியில்

புத்தூர் சந்தி நோக்கி சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால் நெஞ்சில் 3 தடவைகள் குத்திவிட்டு

தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் குடும்பஸ்த்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு