பளை பிரதேசத்தில் மரண சடங்கில் கலந்துகொண்ட யாழ்.மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய நோயாளி..! 56 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
பளை பிரதேசத்தில் மரண சடங்கில் கலந்துகொண்ட யாழ்.மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய நோயாளி..! 56 பேர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.மருதனார்மடம் கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கிளிநொச்சி- பளை பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட 56 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. 

தொற்றுக்குள்ளான நபர் தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முதல் நாள் பளை பிரதேசத்தில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். இதனை சுகாதார பிரிவு விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டதை தொடர்ந்து, 

பளை பிரதேசத்தில் 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையினல் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவு கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு