யாழ்.கோண்டாவில் - உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் சமூக பிறழ்வான நடத்தை இரு பெண்கள் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோண்டாவில் - உப்புமடம் பகுதியில் வீடொன்றில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், ஆண் ஒருவரையும் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

மேற்குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சமூக பிறழ்வான நடத்தை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்.சிறப்பு பொலிஸ் பிரிவினர் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியிருந்தனர். இதன்போது கோப்பாய், கொடிகாமம் பகுதிகளை சேர்ந்த இரு பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 

சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டு. விசாரணைகளின் பின்னர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சட்டத்துக்குப் புறம்பாக செயற்பட்டமை தொடர்பில் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார். இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், சந்தேக நபர்களை ஜனவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு