கிளிநொச்சி மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! பாரதிபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - பாரதிபுரத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிக்குச் சென்ற குடும்பத்தலைவர் ஒருவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் தொற்றுக்கான அறிகுறிகள் அறியப்பட்டன.

பாரவூர்திச் சாரதியான அவர் அன்றைய தினமே வத்தளைக்குச் சென்றிருந்ததால் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. 

அவர்களிடம் பி.சி ஆர் பரிசோதனை பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட முதலாவது பரிசோதனையில் மீளவும் மாதிரிகள் பெறுமாறு ஆய்வுகூடத்தினால் அறிவுறுத்தப்பட்டது. 

அதனடிப்படையில் மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், சாரதியின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக இன்று பெறப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை அறிக்கை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு