கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க ஐ.நா இணக்கம்..! பிரதமருடனான பேச்சுவார்த்தையில் சுமூகம்..

ஆசிரியர் - Editor I

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க ஐ.நா இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியொருவர் , 

UNICEF நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டிம் சடர்ன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

COVID-19 தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் அரசின் தலையீடு அவசியம் என இதன்போது பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் தெரிவித்துள்ளது.

இதனூடாக, நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கொரோன தடுப்பூசி திட்டம் மேலும் வலுவடையும் என அவர்கள் குறிப்பிட்டதாக 

பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொடுத்தாலும் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு