யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த 120 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை. என மாகாண சுகாதார பணிப்பாள் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அதிக கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உடுவிலில் நேற்றும் இன்றும் 220 பேரின் மாதிரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் 

நேற்று ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்கள் 120 பேருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு