மழை வெள்ளத்தினால் வெளியே வந்த பெருமளவு ஆயுதங்கள்..! அதிரடிப்படையினர் மீட்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் புதைத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளது. குறிதத் விடயம் தொடர்பில் 

தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று மீட்டுள்ளனர். இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் 05, ரவைக்கூடு ஒன்று மற்றம் 30 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் சூட்டு பயிற்சி இடம்பெறும் பகுதி என்பதால் அவை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு