தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்த 5 இலங்கையர்கள் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I

இந்தியா - தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்த 5 பேர் மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

போரின் காரணமாக படகுகள் மூலம் உயிர் தப்பி இந்தியாவிற்கு ஓடிய ஈழ அகதிகளில் பலர் தம்மை கப்பல் மார்க்கமாக நாட்டிற்கு திருப்பியனுப்புமாறு 

கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் இதுவரை அனுப்பி வைக்கப்படாத காரணத்தினால் பலர் படகு மூலமே மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிக்கின்றனர்.

இவ்வாறு நேற்றைய தினமும் ஓர் படகு மூலம் ஐவர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு படகில் வந்து இறங்கியவர்களில் 

முத்துராமு கலைச்செல்வன் புத்தளம், அமாதுல்லா பாத்திமா சுயா மன்னார் - புத்தளம், அந்தோணிப்பிள்ளை யுகதாஸ் , சூசையப்பர் கோவிலடி, கோப்பாய் வடக்கு, 

தர்மலிங்கம் ஜெயசீலன் பொல்காவலை, சுமையோன் பிரிஸ் செல்ரன் பீரிஸ் பூந்தோட்டம் வவுனியா ஆகிய ஐவருமே 

இவ்வாறு படகு மூலம் மன்னாரை அடைந்தனர். மன்னாரை வந்தடைந்த இந்த ஐவரும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்மில் 

மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு