கொழும்பு சென்று திரும்பியதை சுகாதார பிரிவுக்கு அறிவிக்காத வர்த்தகர்கள்..! பருத்துறையில் இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் நடந்ததான குற்றச்சாட்டில் இரு வர்த்தக நிலையங்களை சுகாதார பிரிவினர் மூடியுள்ளனர். 

பருத்தித்துறை நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றும் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு இன்று திங்கட்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன.

மேல் மாகாணத்துக்குச் சென்று திரும்பிய உரிமையாளர்கள் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்தல் வழங்காமல் சுகாதார நடைமுறைகளை மீறி 

வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலேயே அவை மூடப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு