பொது போக்குவரத்து சேவை நடத்துவோர், பயன்படுத்துவோர் அவதானம்..! சிவில் உடையில் பொலிஸார் பேருந்துகளில்..

ஆசிரியர் - Editor I

பொது போக்குவரத்து சேவையில் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆராய சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் பொது போக்குவரத்துகளில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.இதேவேளை, பண்டிகைக் காலம் நெருங்குவதால் கொண்டாட்டங்களை 

குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு