யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நல்லுார் பகுதியில் 5 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று சுமார் 110 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதேபோல் 300 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் முல்லோியாவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பட்ட நிலையில் அதில் உடுவில் பகுதியை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் தொிவித்துள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு