அமைச்சர் டக்ளஸின் கூட்டத்திற்கு ஆடிபாடி வந்த அதிகாரி..! இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலமையில் நடைபெற்ற 4 மாவட்ட கடற்றொழிலாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொள்ள தாமதமானதால் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பொறுப்பதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. கூட்டம் ஆரம்பமாகி 1 மணி நேரம் கடந்தும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பொறுப்பதிகாரி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து கூட்டத்தில் அமைச்சர் கேள்வி எழுப்பியபோது அவர் தற்போதுதான் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் கூட்டத்திற்கான அறிவித்தல் எப்போது வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பியபோது அது நேற்றே வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த அமைச்சர் தனது மாவட்ட கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்படும் 

ஒரு கூட்டத்தில் கலாதாமதமாக வரும் அதிகாரியை இடமாற்றம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு தனது செயலாளருக்கு கூட்டத்திலேயே அறிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு