யாழ்.சுன்னாகம் சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் பொது சந்தை வியாபாரிகள் 110 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ச்சியாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றது. இதனடிப்படையில் யாழ்.சுன்னாகம் பொது சந்தை வியாபாரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் மருதனார்மடம் சந்தையை அடிப்படையாக கொண்டு தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு