யாழ்.சங்கானை சந்தை வியாபாரிகள் 8 பேருக்கு தொற்று உறுதி..! மறு அறிவித்தல்வரை இரு சந்தைகள் முடக்கம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானை சந்தை வியாபாரிகள் 8 பேருக்கு தொற்று உறுதி..! மறு அறிவித்தல்வரை இரு சந்தைகள் முடக்கம்...

யாழ்.சங்கானை சந்தை வியாபாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மரக்கறி சந்தை மற்றும் மீன் சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை பூட்டப்படுவதாக வலி,மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன் கூறியுள்ளார்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனை கிடைக்கும் வரை இரண்டு சந்தைகளையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என்றும் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு