யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவிகளுக்கு தொற்று, 80 மாணவர்களும், ஆசிரியர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்றய பரிசோதனையில் தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் 

குறித்த மாணவகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என கருதப்படும் 80 மாணவர்களும், குறித்த மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் 14 நாட்களுக்கு அவர்களுடைய இருப்பிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கிறார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு