யாழ்.சுன்னாகம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்..! கொரோனா தொற்று இல்லாதவரை கொரோனா நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சுகாதார பிரிவு...

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் பகுதியில் கொரோனா தொற்று இல்லாத ஒருவரை சுகாதார பிரிவினர் கொரோனா நோயாளிகளுடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையம் வரை அழைத்தது சென்றுவிட்டு,

பின்னர் தொற்று இல்லை. என மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுள்ள நிலையில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் அதிரச்சி மற்றும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மருதனார்மடம் சந்தையில் வெற்றிலைக் கடை நடாத்தும் பாபு என்பவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். பாபுவிடமும் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இருப்பினும் அதன் பெறுபேறு நேற்றுவரை அவருக்கு தெரியப்படுத்தாத நிலையில் நேற்று  அவரது வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் குழுவினர் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதெனவும்,

வைத்தியசாலைக்கு வருமாறும் கூறி அழைத்துள்ளனர். இதனால் பாபு வாகனத்தில் ஏறிப்பயணித்துள்ளார். பாபுவை கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலைக்கு 

சுன்னாகம் கண்ணகி முகாமில் வசிக்கும் ஒரு கொரோனா நோயாளியினையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒருவரது முகவரி தேடித் திரிந்த பின்பு வைத்தியசாலையினை வாகனம் அடைந்துள்ளது. 

இதன்போது கோப்பாய் கல்வியல் கல்லூரி வாசலில் பதிவேட்டினை பரிசீலித்தவர் கொரோனா நோயாளர் பெயர் பட்டியலில் பாபுவின் பெயர் இல்லை எனக்கூறி இரண்டாவது நோயாளியை மட்டும் வைத்தியசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து பாபு மீண்டும் வீட்டில் கொண்டு சென்று இறக்கப்பட்டபோதும் கொரோனா நோயாளிகூட வைத்தியசாலைக்கு பயணித்தமையினால் கொரோனா தொற்று ஏற்படுமோ என அஞ்சுகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு