யாழ்.மாவட்டத்தில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ரவுடி ஓமந்தையில் பதுங்கியிருந்தபோது கைது..! வாள்கள், கைகுண்டுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வாள்வெட்டு குழு ரவுடி வவுனியா - ஓமந்தை பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

யாழ்.நகரில் பெருமாள் கோவிலுக்கு அருகில் தனுரொக் என்ற வாள்வெட்டு குழு ரவுடி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீடு புகுந்து இளைஞனையும் தாயாரையும் தாக்கியமை 

கச்சேரியில் ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபராக சுமன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளின்

தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓமந்தையில் தலைமறைவாகியிருந்தமை 

தொலைபேசி உரையாடலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார். 

அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு