யாழ்.தீவக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 36 இந்திய மீனவர்கள் கைது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 36 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இவர்கள் நேற்று முன்தினமும், நேற்று நள்ளிரவிலும் கைதாகியுள்ளனர். இவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட 08 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக 

கடற்படை ஊடகப் பிரிவு இன்று முற்பகல் உறுதிசெய்தது.சில படகுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் உள்ள நிலையில் அவற்றை கரைக்கு இழுத்துவரும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் 

கடற்படை குறிப்பிட்டுள்ளது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள இந்த 36 இந்திய மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டபின்னர் பொலிஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு 

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு