வவுனியா மாவட்டத்தில் சமூக தொற்றா..? எழுமாற்று பரிசோதனையிலேயே 15 வயது மாணவி உட்பட இருவருக்கு தொற்று உறுதி, 4 பாடசாலைகள் பூட்டு..

ஆசிரியர் - Editor I

வவுனியா மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்திலுள்ள 4 பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை பூட்டப்பட்டுள்ளது.

மாகாண கல்வியமைச்சின் செயலாளருடைய அறிவுறுத்தலுக்கு அமைவாக வ/ சி சி த க  பாடசாலை, (CCTM school), வ/காமினி ம வித்தியாலயம், வ/ தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம். 

ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படுகின்றது. இதேவேளை வவுனிய வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பரிசோதனையிலேயே 15 வயதான மாணவி உட்பட

இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் சமூக தொற்றா? என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு