யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்குட்பட்ட 147 பாடசாலைகளை மறு அறிவித்தல்வரை மூடுமாறு மாகாண கல்வியமைச்சு அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட சுமார் 147 பாடசாலைகளை உடன் அமுலுக்குவரும் வகையில் மறு அறிவித்தல்வரை பூட்டுமாறு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கூறியுள்ளார். 

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எழுத்துமூல ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் 

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் கூறியுள்ளார். மருதனார்மடம் கோரோனா தொற்றுப் பரவலினால் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் 

இன்று மூடப்பட்டன. இந்த நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட 147 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு