யாழ்.மாவட்டத்தில் அடுத்தடுத்து பூட்டப்படும் சந்தைகள்..! பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் முஸ்த்தீவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக சங்கானை, மற்றும் உரும்பிராய், ஊர்காவற்றுறை சந்தைகள் பூட்டப்படுவதாக பிரதேச பொதுசுகாதார மருத்துவ அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். 

மருதனார்மடம் பொதுசந்தையை அடிப்படையாக கொண்டு பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் பொதுசுகாதார மருத்துவ அதிகாரிகளினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தைகள் பூட்டப்பட்டு அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தைகள் திறக்கப்படும். 

பீ.சி.ஆர் முடிவுகள் பாதகமாக அமைந்தால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். என தொிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு