யாழ்.உடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுகிறது..!

யாழ்.உடுவில் பிரதேச செயலக பிரிவுகள் தற்காலிகமாக முடக்கப்படுவதாக அறிவித்திருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது 

உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு