யாழ்.மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 136 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் அனுராதபுரம் அனுப்பிவைப்பு..! மேலும் பலருக்கு மீண்டும் நாளை பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 136 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் அனுராதபுரம் அனுப்பிவைப்பு..! மேலும் பலருக்கு மீண்டும் நாளை பரிசோதனை..

யாழ்.மருதனார்மடம் பொது சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளில் சுமார் 136 மாதிரிகளை பரிசோதனைக்காக அனுராதபுரம் அனுப்பிவைத்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

நேற்றய தினம் மருதனார்மடம் சந்தை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 38 வயதான ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து குறித்த நபர் ஆட்டோ ஓட்டுவதுடன் சந்தைக்குள் வியாபாரமும் செய்யும் நிலையில் 

சுமார் 394 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஏனையவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு பெறப்படவேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு