யாழ்.மருதனார் மடம் சந்தையில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 31 பேருக்கு அல்ல 6 பேருக்கே உறுதி என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார் மடம் சந்தையில் இன்று 394 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

மருதனார்மடம் சந்தையில் வியாபாரம் செய்யும் 24 வியாபாரிகளுக்கும், அவர்களுடைய உறவினர்கள் 7 பேருக்குமாக மொத்தமாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த தகவல் கூறுகின்றது.. 

இதன்படி மருதனார்மடம் சந்தையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. நேற்றய தினம் சந்தையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 

ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

எனினும் 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே 31 பேருக்கு தொற்றுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்க பின்னடித்துவருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு