யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ்.மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில் குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். 

அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பி.சிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் அவருக்கும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.குறித்த நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாகவும் எனினும் குறித்த நபருடன் நேரடித் தொடர்பு பட்டவர்கள் தாமாக முன்வந்து தங்களை பதிவு செய்யுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு