யாழ்.மருதனார் மடத்தில் சமூக தொற்றா..! எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி, சந்தையில் வியாபாரம் செய்பவராம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மருதனார்மடம் சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்துவதுடன் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுவந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் தகவல் தருகையில், யாழ்.மருதனார் மடம் சந்தை பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த நபர் சந்தைக்குள் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்துவதுடன் பகுதி நேரமாக

வாடகை ஆட்டோ ஓட்டுவதாக பணிப்பாளர் கூறியுள்ளதுடன், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு