பளை - புதுக்காட்டில் கோர விபத்து..! மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I

பளை - புதுக்காட்டு சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியிலுள்ள காபட் நிறுவனத்துக்கு திரும்பிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவமானது 9.15மணியளவில் இடம்பெற்றுளதாக தெரிவிக்கின்றனர்.சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் புலோப்பளையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு