2008ம் ஆண்டு நிஷா புயலுக்கு பின் யாழ்ப்பாணம் போிடரில் சிக்கியுள்ளது..! 75 ஆயிரம் பேர் பாதிப்பு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் “புரவி” புயலுடன் ஆரம்பமான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடித்துவரும் நிலையில் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் கூறியிருக்கின்றார். 

மாவட்டத்தின் தற்போதைய அனர்த்த நிலமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் 23 ஆயிரத்து 304 குடும்பங்களை சேர்ந்த 

75 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாவட்டத்தில் தற்போதும் 21 இடைத்தங்கல் முகாம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பிடங்களை இழந்த மக்கள் தொடர்ந்தும் அங்கே தங்கியிருக்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் 

தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின்காரணமாக யாழ் மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஏற்பட்ட தாழமுக்கத்தினை தொடர்ந்து ஏற்பட்ட புரவி புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ்.மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

புரெவி சூறாவளி தாக்கம் மற்றும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23ஆயிரத்து 304 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் குறித்த சீரற்ற காலநிலையின் தாக்கத்தின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயம் அடைந்துள்ளார்கள்.

இதுவரை 94 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 3 ஆயிரத்து 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சிறு மற்றும் மத்திய முயற்சியாளர்கள் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27 வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. தற்போது இருபத்தொரு இடைத்தங்கல் முகாம்களில் 

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.யாழ் மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ். மாவட்டத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு