கொரோனா தொற்று தொடர்பில் அக்கறையற்று இருக்கவேண்டாம்..! நேற்றும் ஒருவருக்கு தொற்று உறுதி..! மாவட்ட செயலர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மழையுடன் கூடிய காலநிலை உள்ளபோதும் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். 

மேற்கண்டவாறு மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில், 

நேற்றய தினமும் ஒருவருக்கு கொரோனா தொற்றறு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் காண 

நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு மாவட்டத்தில் கொரோனா அபாயம் நிலவும் நிலையில் தற்சமயம் வெள்ள அபாயம் மற்றும் கனமழை

பெய்துவருகிறது. அதற்காக மக்கள் கொரோனா அபாயம் தொடர் தொடர்பில் அக்கறையற்றிருக்க முடியாது. எனவே மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில்

பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட செயலர் மேலும் கூறியிருக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு