யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தார் ஆளுநர்..! தொடரும் கனமழை மற்றும் வெள்ள அபாயம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கனமழை தொடர்வதுடன் வெள்ள அபாயம் நீடிக்கும் நிலையில் இரு மாவட்டங்களிலும் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்துள்ளார். 

தற்போதைய காலநிலை தொடர்பாக மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானத்தை ஆளுநர் அறிவித்துள்ளார். புரவி புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிகிழமை ஆகிய இரு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 

இந்நிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது, 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு