கிளிநொச்சியில் 20 வயதான இளைஞன் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்..!

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சியில் குடிதண்ணீர் விநியோக நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த 20 வயதான இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

குறித்த இளைஞன் ஏற்கனவே தொற்றுக்குள்ளான குடிதண்ணீர் விநியோக நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர் எனவும் அந்த நிறுவனத்திற்கு அருகில் மலர்ச்சாலையில் வேலை செய்யும் நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், 1வது பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை. 

என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யும் நிலையில் 2வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்துக்கு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே தொற்று உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு