யாழ்ப்பாணம் - கண்டி பேருந்தில் கிளைமோர் குண்டுடன் கைது செய்யப்பட்ட தம்பதியின் பின்னணி என்ன..? அதிர்ச்சி பின்னணியை வெளியிட்ட இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் - கண்டி பேருந்தில் கிளைமோர் குண்டுடன் தம்பதிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளிப்படுத்தியிருக்கின்றார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தொடர்நதும் 

கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும் மனைவியும் 

கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள் 

தமது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை. 

மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருகின்றனர்.

இவ்வாறானாவர்களையும், பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை 

அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே 

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு