10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது!!

ஆசிரியர் - Editor II

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். 

இந்த நிலையில் அந்த சிறுவனுக்கும், அந்த பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இதற்கிடையே, மாணவியின் பெற்றோர் அவளது படிப்பிற்காக தனி அறையும் ஏற்பாடு கொடுத்திருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த சிறுவன் மாணவியின் அறைக்குள் புகுந்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது, அந்த பகுதியில் உள்ள சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். 

இது குறித்த சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பதிவான முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை கைது செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு