நவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்..! கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நடத்தப்படும் பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் பாதகமாக அமைந்தால் குறித்த பகுதி முடக்கப்படலாம். என கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

இம் மாதம் மட்டும் 27 கொரோனா நோயாளிகள் வடமாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, 

கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும், முல்லைத்தீவில் இருந்து 2 பேருமாக மொத்தமாக நவம்பர் மாதத்தில் 27 பேர் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றென இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் 7682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலே காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் 

 தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் 

அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும். நேற்றைய தினம் சில பத்திரிகைகளில் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது யாழ் குடாநாடு முடக்கப்படும் என அது ஒரு தவறான செய்தியாகும் தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தினை முடக்க வேண்டிய தேவையில்லை. 

எனினும் காரைநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில்உள்ளவர்களின் பிசிஆர் முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.மேலும்யாழ் மாவட்டத்தில் இயங்கி வந்த மருதங்கேணி கொரணா சிகிச்சை நிலையம் 

தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த 30 நோயாளர்களை நேற்று கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றியுள்ளோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு